ஏடிஹெச்டியைப் பற்றி நீங்கள் படித்திருக்கலாம் அல்லது நண்பர் ஒருவரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கலாம். இளம் பருவத்தில் நீங்கள் அனுபவத்திருக்கலாம் அல்லது உங்களது பிள்ளைகளுக்கு இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
அவரசப்பட்டு ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர், ஏடிஹெச்டி ஒருவருக்கு இருப்பதாக உங்களைச் சந்தேகப்படவைக்கும் அறிகுறிகள் யாவை என்பவற்றை பட்டியலாகக் குறித்துக்கொள்ளுங்கள். நீங்கள் ஆலோசனை பெறப்போகும் நிபுணருடன் பகிர்ந்துகொள்வதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
சிங்கப்பூரில் ஏடிஹெச்டியை உறுதி செய்வதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் பொதுவான இரண்டு வழிகள் உள்ளன. கட்டணக் கழிவுகளைக் கொண்ட மருத்துவமனைகள் அல்லது தனியார்கள் மருத்துவமனைகள் நீங்கள் நாடலாம்.
கட்டணக் கழிவுகளைக் கொண்ட மருத்துவமனைகள்
கட்டணச் சலுகைகளைப் பெற விரும்பும் சிங்கப்பூரர்கள் முதலில் செல்ல வேண்டிய இடம், பலதுறை மருந்தகமாகும் (polyclinic). தேசிய சுகாதார குழுமம், தேசிய பல்கலைக்கழக சுகாதாரக் கட்டமைப்பு, சிங்ஹெல்த் ஆகிய அமைப்புகளும் உங்களை நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலுள்ள மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம். ஆனால் இது சில வாரங்கள் எடுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நிறைகள்:
-கட்டுப்படியான விலைகள் – பலதுறை மருந்தகங்களின் விலைகள் வழக்கமாக 20 வெள்ளிக்குக் கீழ் இருக்கும். நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகத்தில் மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகருக்கான கட்டணம், கிட்டத்தட்ட 45 வெள்ளி.
-அதிக நேரம் காத்திருப்பதற்கான அவசியமில்லாமல், தங்களுக்கு விருப்பமான மனநல மருத்துவரை நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் மனநல மருத்துவரைக் காணலம். ஆனால் இதற்கு கட்டணக் கழிவுகள் இல்லை. கிட்டத்தட்ட 150 வெள்ளி ஆக இருக்கும் இதற்கான கட்டணம், தனியார் மருந்தகங்களின் கட்டணத்தைவிட குறைவு
-குறிப்பிட்ட சில ஏடிஹெச்டி மருந்தகங்களுக்கான விலைக்கழிவுகள், மறுசீரமைக்கப்பட்ட மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது. ரிட்டலின், மெடிகினெட் உள்ளிட்ட மருந்துகள் இவற்றில் அடங்கும்
-மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், சிகிச்சை வழங்குநர் உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட முழுமையான ஒரு குழுவின் உதவியைப் பெறும் வாய்ப்பு
குறைகள்:
-மனநல மருத்துவரைக் காண்பதற்கு சில வாரங்கள் முதல் சில மாதங்கள் வரை ஆகலாம். அவசரமாக உதவி தேவைப்படுவோருக்கு இது ஏற்ற வழி அல்ல
-கட்டணக் கழிவு பெறும் நோயாளிகள், தங்களுக்கு விருப்பமான மனநல மருத்துவரைத் தெரிவு செய்ய முடியாது.
-இத்தகைய மருத்துவமனையில் அதிக நோயாளிகள் வருவதால் மனநல மருத்துவருடன் நோயாளிகள் செலவிடும் நேரமும் குறைகிறது
-சில மருந்துவகைகள் இத்தகைய மருத்துவமனைகளின் கிடைக்காமல் போகலாம்
தனியார் மருந்தகம்
தனியார் துறையில் பல்வேறு மனநல மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். அத்துறையில் உள்ள மனநல ஆலோசகர்களையும் மனநல மருத்துவர்களையும் நாடுவது பரிசோதனைக்கான ஆக விரைவான வழி.
நிறைகள்:
-குறைவான காத்திருப்பு நேரம் – தனியார் துறையில் மனநல ஆலோசகரையோ மனநல மருத்துவரையோ காண்பதற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
-தனியார் துறையில் மனநல ஆலோசகரை நீங்கள் முதலில் காண்பதற்கான தெரிவு உள்ளது (மறுசீரமைக்கப்பட்ட மருத்துவமனையில் நீங்கள் காணும் முதல் நிபுணர் மனநல மருத்துவராக இருக்கப்போகிறார்)
-நோயாளியுடன் அதிக நேரத்தை செலவழிக்க தனியார் துறை மருத்துவமனைகள் பெறுவதால் தேவைக்கேற்ற பராமரிப்பை நோயாளிகள் அதிகம் பெறுகின்றனர்
-மருந்து வகைகளில் அதிகம் தெரிவுகள் (உற்சாகமூட்டும் மருந்துகள், அவை அல்லாத மருந்துகள்)
குறைகள்:
-தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்கள் உயர்வாக இருக்கும். இதுவே சிலர் உரிய பரிசோதனையையும் சிகிச்சைகளையும் பெறுவதற்குத் தடையாக இருக்கலாம். தனியார் துறையில் மனநல ஆலோசகர்களுக்கான கட்டணங்கள் 180 வெள்ளி முதல் தொடங்குகின்றன. மனநல மருத்துவர்களுக்கான கட்டணங்கள் 250 வெள்ளி முதல் தொடங்குகின்றன.
-தனியார் மருந்தகங்களில் மருந்துகள் விலை அதிகமாகவும் இருக்கலாம். மருந்துகள் நீண்டகாலத்திற்கு எடுக்கப்படுவதால் இது ஒட்டுமொத்த செலவுகளை அதிகரிக்கலாம்.
-தனியார் துறையில் மனநல நிபுணர்கள் அதிகமானோர் இருப்பதால் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது குழப்பத்தைத் தரலாம்.
தனியார் மருந்தகம் அல்லது அரசு மருத்துவமனையைத் தேர்ந்தெடுக்கும் முடிவு, உதவி எவ்வளவு அவசரமாகத் தேவைப்படுகிறது, ஒருவரது நிதிநிலைமை, குறிப்பிட்ட ஒரு சேவை உள்ளதா போன்றவற்றைப் பொறுத்துள்ளது.