‘ஏடிஹெச்டி அவிழ்த்தல்’ எழுத்தாளர் ட்ரிசியா லிம், இந்நோய்க்கான அறிகுறிகளைச் சமாளிப்பதற்கான சிகிச்சை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகம் செய்கிறார்.
நடத்தை சார்ந்த சிகிச்சை
பிள்ளைப்பருவத்தின்போது உங்களது நல் நடத்தைக்காக நீங்கள் வெகுமதிகளைப் பெற்றுள்ளீர்களா? அல்லது நீங்கள் குறும்புத்தனமாக இருந்தபோது உங்களது விளையாட்டு நேரம் குறைக்கப்பட்டிருந்ததா? இவற்றுக்கான உங்கள் விடை “ஆமாம்” என்றால் நடத்தை சார்ந்த சிகிச்சையைப் பற்றி நீங்கள் ஓரளவு அறிந்திருப்பீர்கள்.
விரும்பத்தக்க நடவடிக்கைகளுக்கு வெகுமதிகளையும் விரும்பத்தகாத நடவடிக்கைகளுக்கு அவற்றுக்குரிய விளைவுகளையும் முறைப்படி அளிப்பது நடத்தை சார்ந்த சிகிச்சையின் நோக்கமாகும். விரும்பத்தக்க நடத்தையை ஊக்குவிப்பதும் விரும்பத்தகாத நடவடிக்கையை ஒழிப்பதும் இந்தச் சிகிச்சையின் நோக்கமாகும்.
தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, நன்னடத்தை ஆகியவற்றை நடத்தை சார்ந்த சிகிச்சை மேம்படுத்துகிறது. எனவே, ஆறு வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு மருந்து மாத்திரைகளைத் தருவதற்கு முன்னர் இந்த நடத்தை சார்ந்த சிகிச்சையை அளிப்பது சாலச் சிறந்தது என்றது அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு நிலையம்.
மனநல மருந்தகங்களில் பெரும்பாலானவவற்றில் உங்களது பிள்ளைகளுக்கு நடத்தை சார்ந்த சிகிச்சையை அளிக்கக்கூடிய மனோதத்துவ நிபுணர்கள் பணிபுரிவர். மனநல மருத்துவப் பிரிவுகளைக் கொண்ட கே கே மகளிர் சிறார் மருத்துவமன போன்ற மருத்துவமனைகளில் நன்னடத்தை சார்ந்த சிகிச்சைகளை வழங்கலாம். பெற்றோர்களும் இந்தச் சிகிச்சையை அளிப்பதற்கான முறையான பயிற்சியைப் பெற்று தாங்கள் கற்றவற்றி பிள்ளைகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தலாம்.
நடத்தை சார்ந்த சிகிச்சையைப் பற்றிய குறிப்புகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. மனோதத்துவ நிபுணர்களின் சிகிச்சை முறைகளுக்கு மாற்று முறைகளாக இவை இல்லை.
- நீங்கள் ஊக்குவிக்க அல்லது துடைத்தொழிக்க விரும்பும் ஓரிரண்டு நடத்தைகளிலிருந்து தொடங்குங்கள்
- எதிர்பார்ப்புகளை மிகத் தெளிவாக, செய்யக்கூடிய விதமாக அமைத்து அவற்றை உங்களை பிள்ளைகளிடம் தெரிவியுங்கள்
- சீரான போக்கைக் கடைப்பிடிப்பது அவசியம். பொறுமையான, நேர்மறையான அணுகுமுறையைக் கையாளுங்கள்
அன்றாட வேலைகளுக்கான சிகிச்சை (Occupational Therapy)
சில நேரங்களில் நடத்தை பிரச்சினையாக இருக்காது. அன்றாட வேலைகளைச் செய்து முடிப்பது பிரச்சினையாக இருக்கும். அன்றாட வேலைகளுக்கான சிகிச்சை இதற்கு உதவி செய்யும். சிங்கப்பூர் பொது மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளும் தனியார் மனநல நிலையங்களும் இந்தச் சிகிச்சைகளை வழங்குகின்றன.
புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சை (CBT)
புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சை, எதிர்மறை எண்ண ஓட்டங்களை மாற்ற முற்படுகிறது. இதன் விளைவாக விரும்பத்தகாத நடத்தைகள் திருத்தப்படுகின்றன.
உதாரணத்திற்கு, கடந்த காலத்தில் அடிக்கடி தாழ்த்தப்பட்டவர்களிடையே தங்களுக்கு ஆற்றல்கள் இல்லை என்ற மனப்போக்கு வளரலாம். இதனால் இவர்கள் சவால்களை எதிர்கொள்ளத் தயங்கலாம். தவறான மனப்போக்குகளைக் களைத்து சவாலான வேலைகளை மேற்கொள்ள நோயாளிகளுக்கு உதவுவதே இந்தச் சிகிச்சையின் நோக்கம்
ஏடிஹெச்டியை குணப்படுத்துவதில் புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சையின் நற்பலனைப் பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. தனிப்பட்ட முறையில் இந்தச் சிகிச்சை மேற்கொண்டோரில் 63 விழுக்காட்டினர், தங்களது ஏடிஹெச்டி அறிகுறிகளை மேலும் நன்றாக நிர்வகிப்பதை ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. மருந்துகளின் பயன்பாட்டுக்குப் பிறகு மூளையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை மூளையைப் படமெடுக்கும் மற்றோர் ஆய்வு காட்டுகிறது.
தனியார் மனநல மருந்தகங்களிலும் மனநலச் சேவைகளை வழங்கும் மருத்துவமனைகளிலும் புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சை பரவலாக வழங்கப்படுகிறது.
உடற்பயிற்சி
உங்களது உணர்வுகளை மேம்படுத்தும் எண்டோர்பின்களின் அளவை ஏற்றுவதுடன் உடற்பயிற்சி, டோப்பமின், நோரெப்பின்ப்ரின் மற்றும் செரோட்டோனின் அளவுகளை அதிகரிக்கும். கவனத்தை மேம்படுத்த இது உதவும்.
தற்காப்புக் கலை, நடனக்கலை, பாறை ஏறுதல், ‘ஸ்கேட்போர்டிங்’ போன்ற நுட்பங்கள் நிறைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது உத்தமம். கவனத்தை ஒருமுகப்படுத்த இந்நடவடிக்கைகள் பெரிதும் உதவும்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை 50 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் கவனம் மேம்படுகிறது. மன சலசலப்பு, முன்யோசனையின்றி காரியங்களைச் செய்து, பதற்றம் ஆகியவை குறைகின்றன. நிர்வாகத் திறனும் சமூக நடத்தையும் மேம்படுகின்றன. வார்த்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் 60 நிமிட யோகாசன நடவடிக்கையும் இந்த நற்பலங்களையும் தருகின்றன.
இயற்கை
ஒருவரைச் சுற்றி அதிக பசுமை இருந்தால் அவரது கவனமின்மை வெகுவாகக் குறைவதாக ஆய்வு ஒன்று காட்டுகிறது. கவனத்தை இயற்கைச் சூழல்கள் அதிகரிக்கலாம் என்பதற்குச் சான்றாக உள்ளது அந்த ஆய்வு. எனவே உங்கள் வாரயிறுதியின்போது சிங்கப்பூரிலுள்ள பல்வேறு பசுமைத் தடங்களுக்குச் சென்று சுற்றிப் பாருங்கள்!
முடிவு
மருந்துகளை உட்கொள்வது பொதுவான சிகிச்சைமுறையாகக் கருதப்பட்டாலும் அதனுடன் மற்ற முறைகளைப் பயன்படுத்தி
ஏடிஹெச்டியை நிர்வகிக்கலாம். செலவு அதிகமில்லாமல், உல்லாசமாக இருக்கக்கூடிய உடற்பயிற்சி, இயற்கை எழிலை ரசித்தல் போன்ற நடவடிக்கைகளை முயன்று பார்ப்பது நல்லது.
‘ஏடிஹெச்டி அவிழ்த்தல்’ எழுத்தாளர் ட்ரிசியா லிம், இந்நோய்க்கான அறிகுறிகளைச் சமாளிப்பதற்கான சிகிச்சை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகம் செய்கிறார்.
நடத்தை சார்ந்த சிகிச்சை
பிள்ளைப்பருவத்தின்போது உங்களது நல் நடத்தைக்காக நீங்கள் வெகுமதிகளைப் பெற்றுள்ளீர்களா? அல்லது நீங்கள் குறும்புத்தனமாக இருந்தபோது உங்களது விளையாட்டு நேரம் குறைக்கப்பட்டிருந்ததா? இவற்றுக்கான உங்கள் விடை “ஆமாம்” என்றால் நடத்தை சார்ந்த சிகிச்சையைப் பற்றி நீங்கள் ஓரளவு அறிந்திருப்பீர்கள்.
விரும்பத்தக்க நடவடிக்கைகளுக்கு வெகுமதிகளையும் விரும்பத்தகாத நடவடிக்கைகளுக்கு அவற்றுக்குரிய விளைவுகளையும் முறைப்படி அளிப்பது நடத்தை சார்ந்த சிகிச்சையின் நோக்கமாகும். விரும்பத்தக்க நடத்தையை ஊக்குவிப்பதும் விரும்பத்தகாத நடவடிக்கையை ஒழிப்பதும் இந்தச் சிகிச்சையின் நோக்கமாகும்.
தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, நன்னடத்தை ஆகியவற்றை நடத்தை சார்ந்த சிகிச்சை மேம்படுத்துகிறது. எனவே, ஆறு வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு மருந்து மாத்திரைகளைத் தருவதற்கு முன்னர் இந்த நடத்தை சார்ந்த சிகிச்சையை அளிப்பது சாலச் சிறந்தது என்றது அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு நிலையம்.
மனநல மருந்தகங்களில் பெரும்பாலானவவற்றில் உங்களது பிள்ளைகளுக்கு நடத்தை சார்ந்த சிகிச்சையை அளிக்கக்கூடிய மனோதத்துவ நிபுணர்கள் பணிபுரிவர். மனநல மருத்துவப் பிரிவுகளைக் கொண்ட கே கே மகளிர் சிறார் மருத்துவமன போன்ற மருத்துவமனைகளில் நன்னடத்தை சார்ந்த சிகிச்சைகளை வழங்கலாம். பெற்றோர்களும் இந்தச் சிகிச்சையை அளிப்பதற்கான முறையான பயிற்சியைப் பெற்று தாங்கள் கற்றவற்றி பிள்ளைகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தலாம்.
நடத்தை சார்ந்த சிகிச்சையைப் பற்றிய குறிப்புகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. மனோதத்துவ நிபுணர்களின் சிகிச்சை முறைகளுக்கு மாற்று முறைகளாக இவை இல்லை.
- நீங்கள் ஊக்குவிக்க அல்லது துடைத்தொழிக்க விரும்பும் ஓரிரண்டு நடத்தைகளிலிருந்து தொடங்குங்கள்
- எதிர்பார்ப்புகளை மிகத் தெளிவாக, செய்யக்கூடிய விதமாக அமைத்து அவற்றை உங்களை பிள்ளைகளிடம் தெரிவியுங்கள்
- சீரான போக்கைக் கடைப்பிடிப்பது அவசியம். பொறுமையான, நேர்மறையான அணுகுமுறையைக் கையாளுங்கள்
அன்றாட வேலைகளுக்கான சிகிச்சை (Occupational Therapy)
சில நேரங்களில் நடத்தை பிரச்சினையாக இருக்காது. அன்றாட வேலைகளைச் செய்து முடிப்பது பிரச்சினையாக இருக்கும். அன்றாட வேலைகளுக்கான சிகிச்சை இதற்கு உதவி செய்யும். சிங்கப்பூர் பொது மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளும் தனியார் மனநல நிலையங்களும் இந்தச் சிகிச்சைகளை வழங்குகின்றன.
புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சை (CBT)
புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சை, எதிர்மறை எண்ண ஓட்டங்களை மாற்ற முற்படுகிறது. இதன் விளைவாக விரும்பத்தகாத நடத்தைகள் திருத்தப்படுகின்றன.
உதாரணத்திற்கு, கடந்த காலத்தில் அடிக்கடி தாழ்த்தப்பட்டவர்களிடையே தங்களுக்கு ஆற்றல்கள் இல்லை என்ற மனப்போக்கு வளரலாம். இதனால் இவர்கள் சவால்களை எதிர்கொள்ளத் தயங்கலாம். தவறான மனப்போக்குகளைக் களைத்து சவாலான வேலைகளை மேற்கொள்ள நோயாளிகளுக்கு உதவுவதே இந்தச் சிகிச்சையின் நோக்கம்
ஏடிஹெச்டியை குணப்படுத்துவதில் புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சையின் நற்பலனைப் பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. தனிப்பட்ட முறையில் இந்தச் சிகிச்சை மேற்கொண்டோரில் 63 விழுக்காட்டினர், தங்களது ஏடிஹெச்டி அறிகுறிகளை மேலும் நன்றாக நிர்வகிப்பதை ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. மருந்துகளின் பயன்பாட்டுக்குப் பிறகு மூளையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை மூளையைப் படமெடுக்கும் மற்றோர் ஆய்வு காட்டுகிறது.
தனியார் மனநல மருந்தகங்களிலும் மனநலச் சேவைகளை வழங்கும் மருத்துவமனைகளிலும் புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சை பரவலாக வழங்கப்படுகிறது.
உடற்பயிற்சி
உங்களது உணர்வுகளை மேம்படுத்தும் எண்டோர்பின்களின் அளவை ஏற்றுவதுடன் உடற்பயிற்சி, டோப்பமின், நோரெப்பின்ப்ரின் மற்றும் செரோட்டோனின் அளவுகளை அதிகரிக்கும். கவனத்தை மேம்படுத்த இது உதவும்.
தற்காப்புக் கலை, நடனக்கலை, பாறை ஏறுதல், ‘ஸ்கேட்போர்டிங்’ போன்ற நுட்பங்கள் நிறைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது உத்தமம். கவனத்தை ஒருமுகப்படுத்த இந்நடவடிக்கைகள் பெரிதும் உதவும்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை 50 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் கவனம் மேம்படுகிறது. மன சலசலப்பு, முன்யோசனையின்றி காரியங்களைச் செய்து, பதற்றம் ஆகியவை குறைகின்றன. நிர்வாகத் திறனும் சமூக நடத்தையும் மேம்படுகின்றன. வார்த்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் 60 நிமிட யோகாசன நடவடிக்கையும் இந்த நற்பலங்களையும் தருகின்றன.
இயற்கை
ஒருவரைச் சுற்றி அதிக பசுமை இருந்தால் அவரது கவனமின்மை வெகுவாகக் குறைவதாக ஆய்வு ஒன்று காட்டுகிறது. கவனத்தை இயற்கைச் சூழல்கள் அதிகரிக்கலாம் என்பதற்குச் சான்றாக உள்ளது அந்த ஆய்வு. எனவே உங்கள் வாரயிறுதியின்போது சிங்கப்பூரிலுள்ள பல்வேறு பசுமைத் தடங்களுக்குச் சென்று சுற்றிப் பாருங்கள்!
முடிவு
மருந்துகளை உட்கொள்வது பொதுவான சிகிச்சைமுறையாகக் கருதப்பட்டாலும் அதனுடன் மற்ற முறைகளைப் பயன்படுத்தி
ஏடிஹெச்டியை நிர்வகிக்கலாம். செலவு அதிகமில்லாமல், உல்லாசமாக இருக்கக்கூடிய உடற்பயிற்சி, இயற்கை எழிலை ரசித்தல் போன்ற நடவடிக்கைகளை முயன்று பார்ப்பது நல்லது.
‘ஏடிஹெச்டி அவிழ்த்தல்’ எழுத்தாளர் ட்ரிசியா லிம், இந்நோய்க்கான அறிகுறிகளைச் சமாளிப்பதற்கான சிகிச்சை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகம் செய்கிறார்.
நடத்தை சார்ந்த சிகிச்சை
பிள்ளைப்பருவத்தின்போது உங்களது நல் நடத்தைக்காக நீங்கள் வெகுமதிகளைப் பெற்றுள்ளீர்களா? அல்லது நீங்கள் குறும்புத்தனமாக இருந்தபோது உங்களது விளையாட்டு நேரம் குறைக்கப்பட்டிருந்ததா? இவற்றுக்கான உங்கள் விடை “ஆமாம்” என்றால் நடத்தை சார்ந்த சிகிச்சையைப் பற்றி நீங்கள் ஓரளவு அறிந்திருப்பீர்கள்.
விரும்பத்தக்க நடவடிக்கைகளுக்கு வெகுமதிகளையும் விரும்பத்தகாத நடவடிக்கைகளுக்கு அவற்றுக்குரிய விளைவுகளையும் முறைப்படி அளிப்பது நடத்தை சார்ந்த சிகிச்சையின் நோக்கமாகும். விரும்பத்தக்க நடத்தையை ஊக்குவிப்பதும் விரும்பத்தகாத நடவடிக்கையை ஒழிப்பதும் இந்தச் சிகிச்சையின் நோக்கமாகும்.
தன்னம்பிக்கை, சுய கட்டுப்பாடு, நன்னடத்தை ஆகியவற்றை நடத்தை சார்ந்த சிகிச்சை மேம்படுத்துகிறது. எனவே, ஆறு வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு மருந்து மாத்திரைகளைத் தருவதற்கு முன்னர் இந்த நடத்தை சார்ந்த சிகிச்சையை அளிப்பது சாலச் சிறந்தது என்றது அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு நிலையம்.
மனநல மருந்தகங்களில் பெரும்பாலானவவற்றில் உங்களது பிள்ளைகளுக்கு நடத்தை சார்ந்த சிகிச்சையை அளிக்கக்கூடிய மனோதத்துவ நிபுணர்கள் பணிபுரிவர். மனநல மருத்துவப் பிரிவுகளைக் கொண்ட கே கே மகளிர் சிறார் மருத்துவமன போன்ற மருத்துவமனைகளில் நன்னடத்தை சார்ந்த சிகிச்சைகளை வழங்கலாம். பெற்றோர்களும் இந்தச் சிகிச்சையை அளிப்பதற்கான முறையான பயிற்சியைப் பெற்று தாங்கள் கற்றவற்றி பிள்ளைகளுக்கு நேரடியாகப் பயன்படுத்தலாம்.
நடத்தை சார்ந்த சிகிச்சையைப் பற்றிய குறிப்புகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. மனோதத்துவ நிபுணர்களின் சிகிச்சை முறைகளுக்கு மாற்று முறைகளாக இவை இல்லை.
- நீங்கள் ஊக்குவிக்க அல்லது துடைத்தொழிக்க விரும்பும் ஓரிரண்டு நடத்தைகளிலிருந்து தொடங்குங்கள்
- எதிர்பார்ப்புகளை மிகத் தெளிவாக, செய்யக்கூடிய விதமாக அமைத்து அவற்றை உங்களை பிள்ளைகளிடம் தெரிவியுங்கள்
- சீரான போக்கைக் கடைப்பிடிப்பது அவசியம். பொறுமையான, நேர்மறையான அணுகுமுறையைக் கையாளுங்கள்
அன்றாட வேலைகளுக்கான சிகிச்சை (Occupational Therapy)
சில நேரங்களில் நடத்தை பிரச்சினையாக இருக்காது. அன்றாட வேலைகளைச் செய்து முடிப்பது பிரச்சினையாக இருக்கும். அன்றாட வேலைகளுக்கான சிகிச்சை இதற்கு உதவி செய்யும். சிங்கப்பூர் பொது மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளும் தனியார் மனநல நிலையங்களும் இந்தச் சிகிச்சைகளை வழங்குகின்றன.
புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சை (CBT)
புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சை, எதிர்மறை எண்ண ஓட்டங்களை மாற்ற முற்படுகிறது. இதன் விளைவாக விரும்பத்தகாத நடத்தைகள் திருத்தப்படுகின்றன.
உதாரணத்திற்கு, கடந்த காலத்தில் அடிக்கடி தாழ்த்தப்பட்டவர்களிடையே தங்களுக்கு ஆற்றல்கள் இல்லை என்ற மனப்போக்கு வளரலாம். இதனால் இவர்கள் சவால்களை எதிர்கொள்ளத் தயங்கலாம். தவறான மனப்போக்குகளைக் களைத்து சவாலான வேலைகளை மேற்கொள்ள நோயாளிகளுக்கு உதவுவதே இந்தச் சிகிச்சையின் நோக்கம்
ஏடிஹெச்டியை குணப்படுத்துவதில் புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சையின் நற்பலனைப் பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. தனிப்பட்ட முறையில் இந்தச் சிகிச்சை மேற்கொண்டோரில் 63 விழுக்காட்டினர், தங்களது ஏடிஹெச்டி அறிகுறிகளை மேலும் நன்றாக நிர்வகிப்பதை ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது. மருந்துகளின் பயன்பாட்டுக்குப் பிறகு மூளையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை மூளையைப் படமெடுக்கும் மற்றோர் ஆய்வு காட்டுகிறது.
தனியார் மனநல மருந்தகங்களிலும் மனநலச் சேவைகளை வழங்கும் மருத்துவமனைகளிலும் புலன் உணர்வு, நடத்தை சார்ந்த சிகிச்சை பரவலாக வழங்கப்படுகிறது.
உடற்பயிற்சி
உங்களது உணர்வுகளை மேம்படுத்தும் எண்டோர்பின்களின் அளவை ஏற்றுவதுடன் உடற்பயிற்சி, டோப்பமின், நோரெப்பின்ப்ரின் மற்றும் செரோட்டோனின் அளவுகளை அதிகரிக்கும். கவனத்தை மேம்படுத்த இது உதவும்.
தற்காப்புக் கலை, நடனக்கலை, பாறை ஏறுதல், ‘ஸ்கேட்போர்டிங்’ போன்ற நுட்பங்கள் நிறைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது உத்தமம். கவனத்தை ஒருமுகப்படுத்த இந்நடவடிக்கைகள் பெரிதும் உதவும்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை 50 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் கவனம் மேம்படுகிறது. மன சலசலப்பு, முன்யோசனையின்றி காரியங்களைச் செய்து, பதற்றம் ஆகியவை குறைகின்றன. நிர்வாகத் திறனும் சமூக நடத்தையும் மேம்படுகின்றன. வார்த்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் 60 நிமிட யோகாசன நடவடிக்கையும் இந்த நற்பலங்களையும் தருகின்றன.
இயற்கை
ஒருவரைச் சுற்றி அதிக பசுமை இருந்தால் அவரது கவனமின்மை வெகுவாகக் குறைவதாக ஆய்வு ஒன்று காட்டுகிறது. கவனத்தை இயற்கைச் சூழல்கள் அதிகரிக்கலாம் என்பதற்குச் சான்றாக உள்ளது அந்த ஆய்வு. எனவே உங்கள் வாரயிறுதியின்போது சிங்கப்பூரிலுள்ள பல்வேறு பசுமைத் தடங்களுக்குச் சென்று சுற்றிப் பாருங்கள்!
முடிவு
மருந்துகளை உட்கொள்வது பொதுவான சிகிச்சைமுறையாகக் கருதப்பட்டாலும் அதனுடன் மற்ற முறைகளைப் பயன்படுத்தி
ஏடிஹெச்டியை நிர்வகிக்கலாம். செலவு அதிகமில்லாமல், உல்லாசமாக இருக்கக்கூடிய உடற்பயிற்சி, இயற்கை எழிலை ரசித்தல் போன்ற நடவடிக்கைகளை முயன்று பார்ப்பது நல்லது.