ஏடிஎச்டி பற்றிய சில தவறான புரிதல்களை ஆராய்கிறார் எழுத்தாளர் ஸ்டெஃபனி செங்.
ஏடிஎச்டி உள்ளவர்கள் பல நேரங்களில் சோம்பேறிகள் என்றும் தன்முனைப்பு இல்லதவர்கள் என்றும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டனர். ஏடிஎச்டி பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் பாகுபாடு பார்க்கும் எண்ணத்தை விட்டுவிட்டு உரிய உதவியை நாடப் பிறரை ஊக்குவிக்கலாம். ஏடிஎச்டியைப் பற்றிய சில தவறாக புரிதல்களைக் களைவோம்!
முக்கியமான மூன்று தவறானத்தகவல்கள்
#1. சிறார்களுக்கு மட்டுமே ஏடிஎச்டி உள்ளது
பெரியவர்களுக்கும் ஏடிஎச்டி இருக்கும். அமெரிக்காவில் 4.4 விழுக்காடு பெரியவர்களுக்கு ஏடிஎச்டி உள்ளது.
#2. ஏடிஎச்டியை அளிதில் அடையாளம் காணலாம்
ஏடிஎச்டி எப்படி வெளிப்படுகிறது என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். இதனால் அதனைக் கண்டுபிடித்து அடையாளப்படுத்துவது கடினம்
#3. ஏடிஎச்டி உள்ளவர்கள் சோம்பேறிகள்
இது உண்மையல்ல. ஏடிஎச்டி உள்ளவர்களும் மிகவும் முயற்சி எடுத்து தங்களது வேலையை முடிக்க பாடுபடுகின்றனர். வேலையைப் பிரமாதமாக முடித்துக்கொடுக்க அவர்கள் பாடுபட்டாலும் அவர்களது நிலை, இந்த முயற்சி ஈடேறுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. ஏடிஎச்டியால் இவர்களது கவனத்தன்மை பாதிக்கப்படுவாதல் ஏற்படுகிறது. கவனம் செலுத்துவதையும் நிதானமாக யோசிப்பதையும் பொறுமையையும் ஏடிஎச்டி பாதிக்கிறது.
ஏடிஎச்டியால் யார் பாதிக்கப்படுகின்றனர்?
யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். பரவலாக பிள்ளைகளிடத்தில் ஏடிஎச்டி அடையாளம் காணப்பட்டாலும் இளையர்கள், பெரியவர்கள், வயதானோர் ஆகியோரும் பாதிப்படையலாம்
பிள்ளைகள்
பிள்ளைகளிடையே ஆண் பிள்ளைகளில் காணப்படும் அறிகுறிகள், பெண் பிள்ளைகளிடையே காணப்படும் அறிகுறிகளிலிருந்து மாறுபடுகின்றன. ஆண் பிள்ளைகளின் அறிகுறிகள் வெளிப்படையாக இருக்கும். பெண் பிள்ளைகளின் அறிகுறிகள் மனதிற்குள் இருக்கும், பிறரால் எளிதில் காணப்படாத அறிகுறிகள் ஆகும். அத்தகைய அறிகுறிகளில் தாழ்வு மனப்பான்மை ஓர் உதாரணம்.
சிறுவர்கள்
-முன்யோசனையின்மை
-அளவுக்கு அதிகமான சுறுசுறுப்பு
-கவனமின்மை
-வன்முறைப் போக்கு
-அளவுக்கு அதிகமாக பேசுதல்
-பிறர் பேசும்போது குறுக்கிட்டுப் பேசுதல்
சிறுமிகள்
-மிக அமைதியாக இருத்தல்
-தாழ்வு மனப்பான்மை
-பதற்றம்
-படிப்பதில் சிரமம்
-கவனம் செலுத்துவதில் சிரமம்
-கேட்டலில் கவனக்குறைவு
-பேச்சில் எல்லை மீற கோபம்
இளையர்கள்
ஏடிஎச்டியால் பாதிக்கப்பட்ட இளையர்களும், பாதிக்கப்பட்ட சிறார்களைப் போல குறைந்த கவனத்தன்மையைக் கொண்டிருப்பர். பிள்ளைகளைக் காட்டிலும் இளையர்கள் அனுபவிக்கும் தாக்கங்கள் ஓரளவுக்கு குறைவு. ஆயினும் அந்தப் பாதிப்புகள் சாதாரணமாக எடை போட்டுவிடக்கூடியது அல்ல.
-பாதிப்புகள் பின்வருமாறு:
-படிப்பில் சவால்கள்
-உறவுகளில் சர்ச்சைகள்
-உணர்ச்சிகளிலும் தன்னம்பிக்கையிலும் சீர் இன்மை
-அபாயங்களைப் புரிந்துகொள்ளாமல் அகலக்கால் அதிகம் வைத்தல்
-தூக்கப் பிரச்சினை
பெரியவர்கள்
அளவுக்கு அதிகமான உற்சாகம், முன்யோசனை இன்மை, கவனம் இன்மை ஆகியவை ஏடிஎச்டியால் பாதிக்கப்படும் அனைவருக்கும் ஏற்படுபவை. ஆயினும், பெரியவர்கள் அனுபவிக்கும் ஏடிஎச்டி பிறர் கண்களுக்கு அதிகம் புலப்படுவதில்லை. கவனமின்மை போன்ற பிரச்சினைகள் மேலும் கடுமையாகின்றன.
-கொடுக்கப்பட்ட வேலையைக் காலக்கெடுவுக்குள் முடிக்க முடியாமல் இருப்பது
-சந்திப்புகளை மறப்பது
-மறதியால் சமூக ஒன்றுகூடல்களுக்குச் செல்லாமல் இருப்பது
-கோபத்தால் திடீரென ரகளை செய்வது
-பொறுமை கடைபிடிக்காமல் இருப்பது
வயதானவர்கள்
வயதானோருக்கு ஏற்படும் ஏடிஎச்டி குறித்து அதிகம் செய்யப்படுவதில்லை. வயது முதிர்ந்த பெரியவர்களின் ஏடிஎச்டியைக் கண்டுபிடிக்க இயலாத நிபுணர்கள் சில நேரங்களில் முதுமை மறதி நோய் உள்ளிட்ட வேறு பிரச்சிகள் இவர்களுக்கு இருப்பதாகத் தவறாக அடையாளம் காண்கின்றன. ஆயினும், ஏடிஎச்டியால் பாதிக்கப்பட்ட இதர வயதினருக்கு உள்ள பொதுவான அறிகுறிகள் இங்கு உள்ளன.
– நினைவாற்றலில் பிரச்சினைகள்
-வார்த்தைகளை மறப்பது
-மனது குழம்பிப் போவது
-புதிய விஷயங்களைக் கற்பதில் சிரமப்படுவது
-தேவையில்லாமல் பேசுவம்
-பிறர் பேசும்போது குறுக்கிடுவது
-வீட்டு நிர்வாகம் மோசமாக இருப்பது
முடிவு
உங்களுக்கு ஏடிஎச்டி உள்ளது என நீங்களே சந்தேகப்படுகிறீர்கள் என்றால் உதவியைக் கேட்டுப் பெற தயங்காதீர்கள்!
பிரச்சினைகளைக் கண்டுபிடிப்பதன் மூலம் அவற்றுக்கான தீர்வை நெருங் முடியும். ஏடிஎச்டி உள்ளவர்கள் தங்களது நிலையைப் பற்றி மேலும் புரியும்போது உரிய சிகிச்சைகளுடன் அவர்கள் செயல்படலாம். அவ்வாறு தொடர்ந்து செய்யும்போது அவர்களது அன்றாட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படலாம்.
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்கள் எவரோ, இந்தப் பிரச்சினையால் தத்தளித்துக்கொண்டிருப்பதை அறிந்தால், கவலை வேண்டாம்! உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட நாங்கள் இருக்கிறோம்.
பாதிக்கப்பட்டேருக்கு உதவி செய்வதே ‘ஏடிஎச்டி அவிழ்த்தல்’ தளத்தின் நோக்கமாகும். உரிய ஆதரவை வழங்குவதன் மூலம் நாங்கள் ஆதரவுமிக்க சமூகத்தை உருவாக்கி உங்களை எங்களுடன் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்ல உள்ளோம்.